இதை வைத்துக்கொண்டு, 500 ரூபாய் கொடுங்க! அப்பாவி முகத்துடன் மருத்துவமனை வாசலில் இளம்பெண் செய்த தில்லாலங்கடி காரியம் !

இதை வைத்துக்கொண்டு, 500 ரூபாய் கொடுங்க! அப்பாவி முகத்துடன் மருத்துவமனை வாசலில் இளம்பெண் செய்த தில்லாலங்கடி காரியம் !


girl-cheating-in-stanly-hospital-chennai

வடசென்னை பகுதியில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வது ஸ்டான்லி அரசு மருத்துவமனை. இங்கு பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 22 வயது நிறைந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வருபவர்களிடமும், நோயாளிகளை பார்க்க வருபவர்களிடமும் மிகவும் நெருக்கமாகி தனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

 மேலும் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லை. தான் வைத்திருந்த பணமெல்லாம் செலவாகி விட்டது.  இந்த தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கொடுங்கள் என பாவமாக கேட்டுள்ளார். இதனை கண்ட பலரும் அவருக்கு இரக்கப்பட்டு தங்க நாணயத்தை வாங்கி கொண்டு 500 ரூபாயை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த நாணயத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது அது கவரிங் என தெரியவந்துள்ளது. 

stanly hospital

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பிரியா என்பது தெரியவந்தது. மேலும் இது மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் அவர் பலரை ஏமாற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

 அந்த இளம்பெண் ஒரு வாரத்திற்கு முன்பு மூதாட்டி ஒருவரிடம் பேச்சு கொடுத்து ஏமாற்றி 3 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.