கல்லூரி திறந்த முதல்நாளே மனவர்களுக்கிடேயே கடும் மோதல்.! சென்னையில் பரபரப்பு.!

கல்லூரி திறந்த முதல்நாளே மனவர்களுக்கிடேயே கடும் மோதல்.! சென்னையில் பரபரப்பு.!


fight with college student

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. 
 
தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் நேற்று (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் கொரட்டூர் பகுதியில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கல்லூரி திறந்த முதல்நாளான நேற்றே மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியிலிருந்து கொரட்டூர் செல்லும் ரயிலில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவதால் சில மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாட இருப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ரயில் நிலையங்களிலும் மாணவர்கள் மோதலில் ஈடுபடலாம் என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் புறநகர் ரயிலில் ஏறிய 10 கல்லூரி மாணவர்கள் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த 10 பேர் என இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளான நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.