பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை..! உடந்தையாக இருந்த தாய்.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை..! உடந்தையாக இருந்த தாய்.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!



father abused his daughter

சென்னை கிண்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சக மாணவிகளிடம் கூறியுள்ளார். இந்த விவரம் தெரிந்த  தனியார் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் தாய் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி 7 வயதில் இருந்தே தந்தையால் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவரது 15 வயது வரை இது தொடர்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தந்தையால் கர்ப்பமானதை தனது தாயிடம் குறித்த சிறுமி கூறியபோது, அவர் கருவை கலைத்துவிட்டு இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்-தந்தை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தந்தைக்கு மரண தண்டனையும், சிறுமியின் தாய்க்கு ஆயுள் தண்டனையுடன் 10,000 அபராதமும், தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.