தனது 13 வயது மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்.. தாய் எடுத்த அதிரடி முடிவு.!

தனது 13 வயது மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்.. தாய் எடுத்த அதிரடி முடிவு.!



father-abuse-daughter

தான் பெற்ற மகள் என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நபர் ஒருவர் தனது 13 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக வன்கொடுமை தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இச்சம்பவம் அறிந்த அச்சிறுமியின் தாய் தனது கணவரை பல முறை எச்சரித்து வந்துள்ளது. இருப்பினும் தனது கணவரின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படாததை அடுத்து தனது மகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

pollachi

இந்நிலையில் மீண்டும் அந்த கட்டிட தொழிலாளி மனைவி மற்றும் மகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் போலீசார் கட்டிட தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது மகளுக்கு வன்கொடுமை தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கோவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.