மனைவியின் கண் எதிரில் பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

மனைவியின் கண் எதிரில் பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்..!



famous-rowdy-hacked-to-death-in-front-of-his-wife-4-peo

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகேயுள்ள பொத்தேரி, பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடியான இவர் மீது மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த சந்துருவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்துள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த சந்துரு, கடந்த 26 ஆம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக, பொத்தேரி அருகேயுள்ள தைலாவரம் கம்பர் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல்  4 டூ-வீலர்களில் 8 பேர் கொண்ட அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. சந்துரு வீட்டிற்குள் செல்வதை மறைந்திருந்து கண்காணித்த கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி, மாமியார் மற்றும் மாமனார் கண் எதிரில் சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதனை தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தோர் அங்கே ஓடிவர, சுதாரித்த கும்பல் 1 டூ-வீலரை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சென்னை ஏரிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவரது மகன் ரத்னசபாபதி (28), சாமுவேல் என்பவரது மகன் விஷ்ணு (21), காவனூர் மருதமலை என்பவரது மகன் சக்திகுமார் (24), தைலாவரம் கிருஷ்ணன் என்பவரது மகன் கோபாலகண்ணன் (23) ஆகிய 4 பேரும் நேற்று திண்டிவனம் 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரும் விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.