குரூப்-1 தேர்வில் புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த மாணவியை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!



Ex minister vijayabaskar met bavani at home

புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமமான கீழ செட்டியாப்பட்டியில் வசித்து வரும் டீக்கடைக்காரரின் மகள் ஒருவர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.

அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் பயின்ற பவானியா என்ற பெண் குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ள பவானியாவை முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

Vijayabaskar

கீழ செட்டியாப்பட்டிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற விஜயபாஸ்கர் பாவானியா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்‌. பாவானியா மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்திய அவர் மற்ற ஊர் மக்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.