15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு.. எலக்ட்ரீசியன் கைது.!

15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு.. எலக்ட்ரீசியன் கைது.!



Electrician sexual harrasment to girl in Chennai

சென்னையில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் எலக்ட்ரீஷன்னாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

chennai

இதனை சிறுமி தனது வீட்டாரிடம் மறைத்து வந்துள்ளார். இதனிடையே சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெட்ரோலியம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

chennai

இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த போலீசார் எலக்ட்ரீசியன் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.