அடக் கொடுமையே... நிலத்தகராறில் இரட்டைக் கொலை... ராணுவ வீரர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வலைவீச்சு.!
அடக் கொடுமையே... நிலத்தகராறில் இரட்டைக் கொலை... ராணுவ வீரர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வலைவீச்சு.!
ஆலங்குளம் நிலத்தகராறில் வக்கீல் மற்றும் அவரது பெரியப்பா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது.
நெல்லை அருகே ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவருக்கு அசோக்குமார் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் அசோக்குமார் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சின்னத்துரை குடும்பத்திற்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான குழந்தை பாண்டி என்பவரது குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில் குழந்தை பாண்டியன் என்பவரது மகான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் குழந்தை பாண்டியின் மகன் சுரேஷ்குமார் ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அப்போது இரு குடும்பத்தாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சின்னத்துரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் இவர்களிடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார்.
சம்பவம் நடந்த தினமான நேற்று இரவு அசோக்குமார் வீட்டில் இருந்தபோது அங்கே தனது கூட்டாளிகளுடன் வந்த சுரேஷ் வக்கீல் அசோக்குமாரை சரா மாறியாக வெட்டி சாய்த்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இந்தக் கொடூர சம்பவத்தில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த துரைராஜ் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.