ஆண் குழந்தை வேண்டும்; அடம் பிடிக்காத கணவனால் விரக்தியில் விபரீத முடிவெடுத்த 3 குழந்தைகளின் தாய்.!



Dharmapuri Women Suicide 


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியை சேர்ந்தவர் ஜம்பெரி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

ஆண் குழந்தை மீது ஆவல் கொண்ட ஜம்பெரி, தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என மனைவியிடம் மதுபானம் அருந்திவிட்டு தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

tamilnadu

சம்பவத்தன்று கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் ஜம்பெரி உனது தங்கையை நான் இரண்டாவதாக திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்துபோன ராஜேஸ்வரி வீட்டில் தனியே இருக்கையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.