அப்படிப்பட்ட அப்பா வேணாம்மா.. முதலில் இதை பண்ணுங்கம்மா.. கதறி அழுத தாய்க்கு மகள் சொன்ன செம மாஸான வார்த்தை..

அப்படிப்பட்ட அப்பா வேணாம்மா.. முதலில் இதை பண்ணுங்கம்மா.. கதறி அழுத தாய்க்கு மகள் சொன்ன செம மாஸான வார்த்தை..


Daughter told his mother in aaruthal varthai

திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வெங்கடாச்சலம் என்பவரை காதலித்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வெங்கடாச்சலம் வேறு ஒரு பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொண்டு  தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது அந்த பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் வெங்கடாச்சலம் சரஸ்வதியின் வீட்டிற்கு வருவதையும்  நிறுத்தியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சரஸ்வதி தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கதறியவாறு திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து போலீசார் வெங்கடாசலத்தை காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர். அவரும் தனது காதலியுடன் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் தான் தனது காதலியுடனே சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி விட்டு காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார். 

daughter

வெங்கடாசலத்தின் பைக்கின் பின்னால் சரஸ்வதி ஓடி சென்று கதறி அழுது கொஞ்சியுள்ளார். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வெங்கடாசலம் சென்றுள்ளார். கதறி அழுத தாயை பார்த்து மகள் இப்படிப்பட்ட அப்பா நமக்கு வேணாம்மா. முதலில் அவரது நம்பரை உனது மொபைல் போனிலிருந்து டெலிட் பண்ணுங்கம்மா என கூறி தாயை ஆறுதல் கூறி சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.