#Watch: கோடை வெப்பத்தை தணிக்க வந்த மழை; குற்றாலம் அருவிகளில் நீர் வரத்தால் மக்கள் ஆனந்த குளியல்.! 

#Watch: கோடை வெப்பத்தை தணிக்க வந்த மழை; குற்றாலம் அருவிகளில் நீர் வரத்தால் மக்கள் ஆனந்த குளியல்.! 



courtralam-falls-water-level-on-12-april-2024


கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. 

இந்நிலையில், நேற்று முதல் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. 

இதனால் குளுமையான சூழலும் உண்டாகியது. தென்மாவட்டத்தில் பொதிகை நுழைவு வாயிலாக கருதப்படும் தென்காசி மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது. அங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழைப்பொழிவு இருந்தது. 

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட மழையின் காரணமாக, இன்று குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிகளில் நீர் வரத்து காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கத்தில் தவித்த குற்றாலம் மக்கள், காலை முதலாக அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.