அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
ஒருவர் பாதிப்பு, 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி.! தமிழகத்தின் நிலை என்ன..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.!
ஒருவர் பாதிப்பு, 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி.! தமிழகத்தின் நிலை என்ன..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியா உட்பட 70 கும் மேலான உலக நாடுகளுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.
இந்தியாவிலும் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கும் கொரோனா பாதிப்பு சோதனை நடந்துவருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கொரோனா குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும், முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.