மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.! நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.! நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



corona-reduced-in-tamilnadu-EASCBH

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்  கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் தமிழக்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

corona

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்றுமட்டும் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,068 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் நேற்று 1,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.