தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைத்துக்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,122 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,97,391-பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 8,501- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.