அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
சென்னையில் கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா! நேற்று ஒருநாள் மட்டும் 12 பேர் பலி! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு?.
சென்னையில் கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா! நேற்று ஒருநாள் மட்டும் 12 பேர் பலி! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு?.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்திலே தலைநகர் சென்னையில் தான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் சென்னையில் மட்டும் 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,579 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 12 பேர் கொரோனாவால் பலியான நிலையில், சென்னையில் கொரோனாவால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.