காம கொடூரன், கல்லூரி நிர்வாகி அரங்கேற்றிய மன்மத லீலைகள், வாட்ஸ் அப்பில் அம்பலமாகும் ரகசியங்கள் .!

காம கொடூரன், கல்லூரி நிர்வாகி அரங்கேற்றிய மன்மத லீலைகள், வாட்ஸ் அப்பில் அம்பலமாகும் ரகசியங்கள் .!


college-md-sex-torture-to-office-girls

கோவையில் கல்லூரி நிர்வாக இயக்குநரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அலுவலக பணியாளராக பணிபுரிந்த பெண்  ஒருவர் வாட்ஸ் ஆப்பில் கருத்துகளை பகிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் 23 வயது பெண் ஒருவர் , அதே பகுதியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குநரான சுப்பிரமணியம் என்ற 64 வயது நபர் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண்களை கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் என சில்மிஷம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அந்த பெண், நிர்வாக இயக்குநரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் இது குறித்து வாட்ஸ் ஆப்பில் புகார் அனுப்பியுள்ளார்.

                                        

                              college

 

 அதில் சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர யாருகிட்டயும் சொல்லாம மறச்சிட்டு அமைதியாக இருந்தேன்.

நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று அனுப்பியுள்ளார்.

                                        

                                    college

இதற்கு பதில் அளித்த நளின் கூறுகையில் ,இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களை அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்த போது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்.

எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளது என்று நளின் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்த காணொளிக் காட்சியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.