பிரெஷ் கேர்ள்ஸ் தான் அவருக்கு... சம்பவத்தன்று நடந்தது இதுதான் - சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் புரோக்கர் பகீர் வாக்குமூலம்.!

பிரெஷ் கேர்ள்ஸ் தான் அவருக்கு... சம்பவத்தன்று நடந்தது இதுதான் - சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் புரோக்கர் பகீர் வாக்குமூலம்.!


cinema producer murder case issue

திரைப்பட வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்கள் மற்றும் விபச்சாரத்தில் முதன் முதலாக ஈடுபடவுள்ள இளம்பெண்களை தேடித்தேடி உல்லாசமாக இருந்த சினிமா பைனான்சியர், அழகிகள் வர காத்திருக்க முடியாமல் புரோக்கரிடம் வாயைக்கொடுத்து இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தனிமனிதனுக்கு ஒழுக்கம் இல்லையேல் அவன் எப்படியெல்லாம் உயிரிழப்பான் என்பதற்கு சாட்சியாக அமைத்துள்ள சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம், இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன் (வயது 65). திரைப்பட தயாரிப்பாளரான இவர், கட்டுமான தொழிலாளியும் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று முந்தினம் விருகம்பாக்கம் செனாய் நகர் கூவம் ஆற்றங்கரையோரம் பிளாஸ்டிக் பையில் பாஸ்கரனின் உடல் மீட்கப்பட்டது. 

அவரின் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்ததால் கொடூரமாக அடித்து கொலை நடந்தது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் அதிரடியக விசாரணை நடத்தினர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் பாஸ்கரனின் உடலை வீசிச்சென்றது தெரியவந்துள்ளது. 

இதே பகுதியில் வசித்து வரும் கணேசன் (வயது 50) என்பவரின் வீட்டிற்கு பாஸ்கரன் இறுதியாக வந்தும் சென்றுள்ளார். கணேசன் வீட்டினை பூட்டிவிட்டு சம்பவத்திற்கு பின்னர் திடீரென தலைமறைவாகவே, அவரை தேடிய அவள் துறையினர் செங்குன்றத்தில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர். விசாரணையில், விபச்சார தரகராக கணேசன் பாஸ்கரனை கொலை செய்ததும் உறுதியானது. 

கணேசனின் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, "விருகம்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நான் வசித்து வருகிறேன். சினிமா படத்திற்கு கதையெழுத்துவதாக கூறி, இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் குடியிருப்பில் இருந்தேன். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் - பாஸ்கரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நான் விபச்சாரம் செய்யும் புரோக்கராக இருந்து வருகிறேன். பாஸ்கரன் இளம்பெண்ணொடு உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டால் என்னிடமே கூறுவார்.

Crime

பாலியல் தொழிலுக்கு முதன் முதலாக வருகை தரும் இளம்பெண்கள் மற்றும் துணை நடிகைகளுடன் பாஸ்கரன் உல்லாசமாக இருப்பார். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்துகொடுப்பேன். சில நேரங்களில் வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாத சமயத்தில் வீட்டிற்கே அழகிகளை அழைத்து வரச்சொல்லி உல்லாசமாக இருப்பார். இதற்கு ஆகும் செலவுகளையும் அவர் ஓடுத்துவிடுவார். 

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி 2 இளம்பெண்கள் இருப்பதாக பாஸ்கரனிடம் தெரிவிக்க, அவர் ஏ.டி.எம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு எனது வீட்டிற்கு வந்தார். அப்போது அழகிகள் வர தாமதம் ஆகியதால், ஆத்திரமடைந்த பாஸ்கரன் என்னிடம் தகராறு செய்தார். இதனால் எங்களுக்குள் சண்டை நடந்து, எனது குடும்பம் உரித்து அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் பாஸ்கரனை சரமாரியாக அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தேன். 

பின்னர் அவரின் உடலை பிளாஸ்டிக் கவரால் சுற்றி நள்ளிரவு நேரத்தில் கூவம் ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு வந்தேன். இருப்பினும் காவல் துறையினர் என்னை கைது செய்துவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரைஉலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.