பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்த இளைஞர்..!!!! சுதாரித்த சிறுமியின் பெற்றோர்..!!

பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்த இளைஞர்..!!!! சுதாரித்த சிறுமியின் பெற்றோர்..!!



children-kidnap-m8jt2r

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரன் நாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு தாமரைச் செல்வன் என்ற பெயர் கொண்ட 23 வயதுடைய ஒரு மகன் உள்ளார். தாமரைச் செல்வன் என்ற இளைஞர் 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக, ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து  பாலியல் கொடுமை செய்துள்ளார்.

பின்னர், இது பற்றி சிறுமியின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், அச்சிறுமியிடம்  பெற்றோர்கள் இதைப் பற்றி கேட்டனர். அதன் பின், அச்சிறுமி தயங்கிய நிலையில் நடந்த உண்மைகளை கூறியுள்ளார். பிறகு சிறுமியின் பெற்றோர் இது குறித்து விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர், மகளிர் காவல் அதிகாரி இச்சம்பவம் குறித்து, தாமரைச் செல்வனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அச்சிறுமியை காதலித்து, பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது. அதன் பிறகு மகளிர் போலிஸ் அதிகாரி தாமரைச் செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.