கஞ்சாவை தட்டிவிட்ட குழந்தைகள்; சூடு வைத்து கொடுமை செய்த கஞ்சா குடிக்கி தகப்பன்.!

கஞ்சாவை தட்டிவிட்ட குழந்தைகள்; சூடு வைத்து கொடுமை செய்த கஞ்சா குடிக்கி தகப்பன்.!



Chennai Tondiarpet Man Torture Children 

 

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் டில்லி கணேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

கஞ்சா போதைக்கு அடிமையான கணேஷ், எப்போதும் கஞ்சாவை வீட்டிற்கே வாங்கி வந்தும் புகைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். 

இந்நிலையில், நேற்று கணேஷ் கஞ்சா வாங்கி வைத்திருந்த நிலையில், அவரின் குழந்தைகள் கஞ்சாவை தட்டிவிட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த கயவன், குழந்தைகள் மீது சூடு வைத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டில்லி கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.