#Chennai Rains Now: தாம்பரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை...!
#Chennai Rains Now: தாம்பரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை...!
தமிழக கடற்கரை பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம். சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மேலாகவே தாம்பரம் பகுதியில் மழை பெய்வதற்கு அறிகுறியாக மேகம் திரண்டிருந்த நிலையில், மதியம் 1.30 மணியளவில் திடீரென லேசான சூறைக்காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் மக்கள் குளுமையான சூழலை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் மக்களை வாட்டிவதைத்த நிலையில், நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் செல்ல வழியில்லாமல் தவித்தாலும், குளுமையான சூழல் மக்களின் மனதை மகிழ வைத்துள்ளது.