#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 



chennai-rmc-announce-3-hrs-rain-22-nov-2022

 

கடலூர், நாகப்பட்டினம் உட்பட 10 மாவட்டங்களுக்கு 3 மணிநேரத்திற்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்துள்ள காரணத்தால், தமிழ்நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டு இருந்தது.

chennai

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.