கடன் தொல்லையால் வங்கி துணை மேலாளர் குடும்பத்தை கொலை செய்து தானும் தற்கொலை..! சென்னையில் சோகம்.!!



Chennai Perungudi Bank Assistant Manager Killed Wife Sons Suicide Him self due to Loan Issue

வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்த நபர், கடன் தொல்லை குடும்ப தகராறால் மனைவி, குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலைசெய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள பெருங்குடி பெரியார் சாலை பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரா என்ற பிரியா. இந்த தம்பதிகளுக்கு சரண் என்ற 10 வயது மகனும், ஒரு கைகுழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2 மாதமாக மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், இவர்களுக்கு ரூ.15 இலட்சம் கடன் இருந்ததாகவும் தெரியவருகிறது. இதனால் கணவன் - மனைவியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

chennai

இன்றும் வழக்கம்போல தம்பதிகளிடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் மகன் விளையாட வைத்திருக்கும் கிரிக்கெட் மட்டையால் மனைவி பிரியாவை அடித்து கொலை செய்துள்ளார். 

பின்னர், தனது 10 வயது மகனையும் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து, 1 வயது குழந்தையை பனியன் துணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். குடும்பத்தினரை கொலை செய்த மணிகண்டன் சமயலறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

chennai

வீட்டின் கதவுகள் திறந்திருந்தும், அழைத்தும் யாரும் வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் காவல் துறையினர் நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடன் தொல்லையால் மணிகண்டன் குடும்பத்தினரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெருங்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.