கள்ளகாதலுக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி.. கொள்ளை நாடகமாடி நீலிக்கண்ணீர்.. நடந்த பயங்கரம்.!

கள்ளகாதலுக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி.. கொள்ளை நாடகமாடி நீலிக்கண்ணீர்.. நடந்த பயங்கரம்.!


Chennai Illegal Affair Woman Killed Husband With help of Affair Man

கணவரை திட்டமிட்டு கொலை செய்து கொள்ளை நாடகம் ஆடிய மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலன் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி கல்பனா. தம்பதிகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த வந்த நிலையில், கல்பனாவுக்கு தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலரவே, இருவரும் தனிமையில் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த கள்ளக்காதல் விவகாரமானது சீனிவாசனுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். கணவருக்கு தனது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த கல்பனா, அவரை கொலை செய்ய கள்ளக்காதலன் தினேஷுடன் சதித்திட்டம் தீட்டியுள்ளார். 

tamilnadu

சம்பவத்தன்று, கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு சென்று தம்பதிகள் திரும்பி வந்துகொண்டு இருந்த நிலையில், கள்ளக்காதலன் தினேஷின் உதவியுடன் சீனிவாசனை கல்பனா கொலை செய்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் கொள்ளை கும்பல் கணவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் கள்ளகாதலுக்காக நடந்த கொலை என்பதை உறுதி செய்து, கல்பனா மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்த நிலையில், இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.