"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
சென்னை நோக்கி காரில் வந்த குடும்பத்தினர்.! திடீரென நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு .! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.!
சென்னை நோக்கி காரில் வந்த குடும்பத்தினர்.! திடீரென நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு .! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.!
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி காரில் தனது குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில், கூடுவாஞ்சேரி பேரூந்துநிலையம் அருகே வரும்போது, திடீரென காரின் முகப்பு பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து, காரை ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார். மேலும், காரில் இருந்த அவரது குடும்பத்தினரும் கீழே இறங்கியுள்ளனர். அவர்கள் கீழே இறங்கிய அடுத்த நொடியே காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
சற்று நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்தது. இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் லேசான புகை வரும்போதே காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.