உயிருடன் இருந்த அண்ணனை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த தம்பி! சேலத்தில் நடந்த கொடூரச்சம்பவம்.!

உயிருடன் இருந்த அண்ணனை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த தம்பி! சேலத்தில் நடந்த கொடூரச்சம்பவம்.!



brother-was-alive-locked-body-freezer-box

சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வரும் 70 வயதான சரவணன் என்பவர், அவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து குளிர்சாதனப்பெட்டியில் முதியவர் பாலசுப்பிரமணியத்தின் உடலை வைத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் சரவணனிடம்  குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர் எவ்வித அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், விரைவில் உயிரிழந்து விடுவார் எனக் கூறியுள்ளார்.

brotherஇதனையடுத்து போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குளிர்சாதன பெட்டிக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்பாகவே, சகோதரரை இறந்ததாக கூறி குளிர்சாதனப்பெட்டியில் அடைத்து வைத்த மனிதநேயமற்ற கொடூரச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.