சென்னையில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன் மற்றும் நண்பன் கைது!
சென்னையில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன் மற்றும் நண்பன் கைது!
சென்னை ஆவடி அருகே கண்ணப்பாளையத்தில் கடந்த 7 ஆம் தேதி மல்லிகா(56), என்பவர் வீட்டின் சமையலறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். ஏற்கனவே கணவரை இழந்த மல்லிகாவிற்கு குழந்தைகள் இல்லை.
இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் முடிவில் மல்லிகாவின் அக்கா பத்மா என்பவரின் பேரன் கோகுல்(19) மற்றும் அவனது 17 வயது நண்பன் தான் மல்லிகாவை கொலை செய்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கணவரை இழந்த பத்மாவின் மகள் விஜயா தனது மகன் கோகுலுடன் கொளத்தூரில் வசித்து வந்துள்ளார். கூலி வேலைக்கு செல்லும் கோகுல் அடிக்கடி ஆவடியில் இருந்த பாட்டி மல்லிகாவிடம் செலவிற்கு பணம் வாங்குவது வழக்கம்.
சம்பவத்தன்று தனது நண்பனுடன் பாட்டி மல்லிகாவை பார்க்க சென்ற கோகுல், வாடகைக்கு புதிதாக வீடு மாற வேண்டும் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டுள்ளான். இதற்கு பாட்டி பணம் இல்லை எனக் கூறவே ஆத்திரமடைந்த கோகுல் பாட்டியை கொலை செய்துள்ளான். பின்னர் பாட்டியிடம் இருந்த நகைககளை திருடி சென்றுள்ளனர்.