12 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி இளைஞர் செய்த காரியம்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

12 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி இளைஞர் செய்த காரியம்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.



Boy cheated 12th standard school girl in the name of marriage

திருமண ஆசைகாட்டி 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி ராம் நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஒருவரின் 17 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி கடந்த 30 ஆம் தேதி அன்று தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

உறவினர் வீட்டிற்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடியுள்ளனர்.

Crime

இந்நிலையில்தான் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த விக்ரம்(21) என்ற இளைஞர் அந்த பள்ளி மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவி மற்றும் அந்த இளைஞரை தேடிவந்தநிலையில் அந்த இளைஞரை போலீசார் தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து கைதுசெய்து அவருடன் இருந்த பள்ளி மாணவியை மீட்டனர்.

இதனை அடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருமண ஆசைகாட்டி அந்த பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்துள்ளனர்.