அண்ணாமலையின் சர்ச்சை பேச்சை கண்டித்த திமுக எம்.பி கனிமொழிக்கு பதில் கண்டிப்பு.. பதிலுக்கு பதில்.!

அண்ணாமலையின் சர்ச்சை பேச்சை கண்டித்த திமுக எம்.பி கனிமொழிக்கு பதில் கண்டிப்பு.. பதிலுக்கு பதில்.!



annamalai-reply-dmk-mp-kanimozhi

அரசியலில் கருத்து மோதல்கள் ஆரோக்கியமான வகையில் இருந்த காலம் மலையேறிவிட்டது.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி பத்திரிகையாளர் நேர்காணல் பேட்டி எடுத்திருந்தார். இந்த பேட்டியில் அமைச்சருக்கு ஆதரவான கேள்விகள் மட்டுமே திட்டமிட்டு கேட்கப்பட்டது என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில், இவர்களின் பேட்டி 'பல்லு படாம பார்த்து' என கிராமத்தில் வட்டார வழக்கில் சொல்வதை போல இருந்தது என பத்திரிகையாளர் மற்றும் அமைச்சரை விமர்சனம் செய்திருந்தார். 

இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, பலரும் அண்ணாமலைக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழியும், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், 

annamalai

"அண்மையில் பாஜக தலைவர்  திரு. அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, "ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும்  தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது. 

அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதில் தெரிவித்து இருக்கிறார்.