அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை! பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!

அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை! பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!


ammk-supporter-murdered-in-perambalur


பெரம்பலூரில் அமமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் அமமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தவர் வல்லத்தரசு. இவர் நேற்று பெரம்பலூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில்  நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் அமமுக-வினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.