அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை.! ஆனால் இவர்களுக்கு இல்லை..!
அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை.! ஆனால் இவர்களுக்கு இல்லை..!
தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மீறி கல்லூரிகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் பள்ளிகளில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.