முடிவுக்குவரும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னை! அணைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சென்னை வர உத்தரவு.!
முடிவுக்குவரும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னை! அணைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சென்னை வர உத்தரவு.!
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் தற்போது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி கடுமையான ஏற்பட்டுள்ளதால், அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இருந்துவருகிறது.
பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சூழ்நிலையில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6 ஆம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.