சூப்பர் சார்!! கொரோனா தடுப்புப் பணிக்காக பணத்தை கொட்டி கொடுத்த நடிகர் விக்ரம்!! எவ்வளவு தெரியுமா??
சூப்பர் சார்!! கொரோனா தடுப்புப் பணிக்காக பணத்தை கொட்டி கொடுத்த நடிகர் விக்ரம்!! எவ்வளவு தெரியுமா??
கொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் அரசின் முயற்சிகளுக்கு உதவியாக பொதுமக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நிதி உதவி செய்துவருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், ரஜினி, உதயநிதி ஸ்டாலின் என பலரும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.