அதிகாலையில் நடந்த கோர விபத்து! ஜார்கண்டை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பலி

அதிகாலையில் நடந்த கோர விபத்து! ஜார்கண்டை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பலி


Accident near kallakurichi

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.  

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

accident

மினி வேனில் சென்றவர்கள் உயர்மின்கோபுரங்களை அமைக்கும் பணிக்காக சென்னையிலிருந்து கோவைக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள். பலியான 8 பேரில் 7 பேர் ஜார்கண்டை சேர்ந்தவர்கள் மற்றும் 1 பேருந்து ஓட்டுநர் ஆவார்.