அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரம்.! பரிதாபமாக பறிபோன 12 உயிர்கள்!! சோக சம்பவம்!!

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரம்.! பரிதாபமாக பறிபோன 12 உயிர்கள்!! சோக சம்பவம்!!



Accident happened in karnataka 12 people dead

கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில்  12 பேர் பலியான சம்பவத்தில் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் சிக்கபல்லபூர் என்ற நகரில்  அமைந்துள்ள போக்குவரத்துக் காவல் நிலையம் அருகே அதிகாலையில் சாலையின்  ஓரத்தில் நின்று கொண்டிருந்த  கான்கிரீட் ரெடி மிக்ஸ் லாரி மீது ஆந்திராவில் இருந்து  பெங்களூரு  சென்று கொண்டிருந்த டாடா  சுமோ மோதியது.

accident

அதிக பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில்  12 பேர்  உயிரிழந்ததாகவும், மூன்று பேர்  படுகாயத்துடன் அருகில் உள்ள  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

உயிரிழந்தோரின்  உடல்கள்  அருகில் உள்ள  அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.