திருமணமான பெண்ணுடன் மும்பைக்கு ஓடிய வாலிபர்... சமயம் பார்த்து போட்டு தள்ளிய கணவர்...!

திருமணமான பெண்ணுடன் மும்பைக்கு ஓடிய வாலிபர்... சமயம் பார்த்து போட்டு தள்ளிய கணவர்...!



A young man ran away to Mumbai with a married woman... Her husband pushed her away...

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிஞ்சி குளம் கிராமத்தில் வசிக்கும் மாரியப்பனின் மகன் வெள்ளியப்பன் (32). இவர் மும்பையில் கூலி வேலை செய்து வருகிறார்.

வெள்ளியப்பன் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வரும்போது, நெல்லை சி என் கிராமத்தில் உள்ள திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது அந்த பெண்ணினுடைய கணவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்த பெண்ணின் கணவர் வெள்ளியப்பனை கண்டித்துள்ளார். அதை கண்டு கொள்ளாத அவர்கள் உறவை தொடர்ந்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் மும்பை சென்றுள்ளனர். தனது மனைவி வெள்ளியப்பனுடன் மும்பைக்கு சென்று விட்டதால், அவரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் வெள்ளியப்பனை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியை விட்டு விடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதை மெல்லியப்பன் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் குறிஞ்சி குளத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக வெள்ளியப்பனும் அந்த பெண்ணும் வந்துள்ளனர். அவர்கள் அங்கு வந்ததை அறிந்த பெண்ணின் கணவரும் உறவினர்களும், வெள்ளியப்பணி கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து, இன்று வெள்ளியப்பன் தனியாக குறிச்சி குளம் தாழையூத்து பிரதான சாலையில் பைக்கில் சென்ற போது, அவரை வழிமறித்து சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டப் பகலில் இந்த கொலை நடந்திருப்பது, அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஏழு பேரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் கணவரையும் இன்னும் சிலரையும் தேடி வருகின்றனர்.