திருமணமாகி இவ்வளவு நாட்களாகியும் குழந்தை இல்லாத ஏமாற்றத்தால் விரத்தி அடைந்த வாலிபர்... எடுத்த விபரீத முடிவு..!

திருமணமாகி இவ்வளவு நாட்களாகியும் குழந்தை இல்லாத ஏமாற்றத்தால் விரத்தி அடைந்த வாலிபர்... எடுத்த விபரீத முடிவு..!


A teenager who was frustrated by the disappointment of not having a child even after being married for so long... made a perverse decision.

திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் 35 வயது ஆண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மராட்டிய மாநிலத்தில், மும்பை மாவட்டம், குல்ரா நகரம் குரேஷி நகரில் வாழ்ந்து வருபவர் மஸ்ஹர் அலி அன்சாரி (35). இவருக்கு கடந்த 2017-ஆம் வருடம் திருமணம் நடந்தது. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் அன்சாரிக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர் எப்பொழுதும் கவலையில் இருந்துள்ளார். 

இந்நிலையில், குழந்தை பிறக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அன்சாரி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். எலி மருந்து சாப்பிட்ட அன்சாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி புதன்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.