புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் கிடந்த 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் கிடந்த 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்களாகோவில் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது விவசாய நிலத்தில் பழமையான மகாவீரர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த தொல்லியல் ஆய்வுக்கழக குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதில் ஒன்றரை அடி அகலம், மூன்றரை அடி உயரத்துடன் அந்த சிற்பம் இருந்துள்ளது.
சமீபத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.