10 வயசு மாணவினு பார்க்கல! 65 வயசு தங்கவேல் செய்த காரியம்! உடந்தையாக இருந்த மனைவி
10 வயசு மாணவினு பார்க்கல! 65 வயசு தங்கவேல் செய்த காரியம்! உடந்தையாக இருந்த மனைவி
வயதான நபர் ஒருவர் 10 வயது மாணவி ஒருவருக்கு பள்ளிக்கூடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 65 வயதாகும் தங்கவேல். இவரது மனைவி அய்யம்மாள்(55). தங்கவேல் போக்குவரத்துக்கு துறையில் வேலைபார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி அய்யம்மாள் அதே பகுதியில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தினமும் காலையில் மனைவியை பள்ளிக்கு அழைத்துச்சென்று விட்டுவந்துள்ளார் தங்கவேல். இப்படி பள்ளிக்கு போவதும் வருவதுமாக இருவர் அவர் அதே பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். பள்ளியில் தனியாக இருக்கும் ரூம் ஒன்றுக்கு மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியும் உள்ளார்.
அவரின் மிரட்டலுக்கு பயந்துபோன அந்த மாணவி இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் தங்கவேலின் தரங்கெட்ட வேலை நாளுக்கு நாள் அதிகரித்தநிலையில் வேறுவழியில்லாமல் பள்ளி தலைமை ஆசிரியரும், தங்கவேலின் மனைவியுமான அய்யம்மாளிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார்.
ஆனால் அவரோ இதை கண்டுகொள்ளவில்லை. மாறாக மாணவியை அடித்து மிரட்டியும் வந்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த மாணவி TC வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு மாறியுள்ளார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த தங்கவேல் மாணவியை பலநாள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் மாணவியின் வீட்டுக்கே நேராக சென்று, ஏன் இப்போதெல்லம் பள்ளிக்கு வருவதில்லை என விசாரித்துள்ளார். தங்கவேல் வீட்டிற்கு வந்து விசாரிக்க தொடங்கியதை நினைத்து மேலும் பயந்துபோன மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ, அடித்தல், மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.