புதுக்கோட்டையில் கடலோரம் விளையாடிய 5 வயது சிறுமி.! கடலில் தவறி விழுந்து பரிதாப பலி.! பதறிப்போன பெற்றோர்.!

புதுக்கோட்டையில் கடலோரம் விளையாடிய 5 வயது சிறுமி.! கடலில் தவறி விழுந்து பரிதாப பலி.! பதறிப்போன பெற்றோர்.!



5 years child died in sea

நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். முருகானந்தத்தின் மனைவி சுதா. இந்த தம்பதிக்கு 5 வயதில் கமலி என்ற மகள் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் சிறுமி கமலி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கமலி கடலில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

childமருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.