மின்னல் வேகத்தில் வந்த ரயில்! 10 மாத கை குழந்தையுடன் ரயிலில் விழுந்த தாய்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.
மின்னல் வேகத்தில் வந்த ரயில்! 10 மாத கை குழந்தையுடன் ரயிலில் விழுந்த தாய்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம் அருகே 30 வயது பெண் ஒருவர் தனது 10 மாத பெண் குழந்தையுடன் பெங்களூர் நோக்கி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பெண் ரயில்வே ட்ராக் அருகே சென்றுகொண்டிருந்த போது ரயில் வருவதை பார்த்து திடீரென தனது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்துளார். இதில் அந்த பெண் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழக்க, அந்த 10 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தலையில் அடிபட்ட குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்னனர். மேலும், தற்கொலை செய்துகொண்ட அந்த பெண் யார், ஏன் தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.