இளம் பெண்ணுடன் வீடியோ கால்.! காதலி மறுத்ததால் இளைஞர் செய்த பதறவைத்த காரியம்!
இளம் பெண்ணுடன் வீடியோ கால்.! காதலி மறுத்ததால் இளைஞர் செய்த பதறவைத்த காரியம்!
சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான ஜோனாதன் பமோயி என்ற இளைஞர் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் நேற்று மாலை தனது அறைக்கு செல்வதாக மேலாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை.
இன்றும் அவர் ஹோட்டலுக்கு வராததால் சந்தேகமடைந்த மேலாளர் ஜோனாதன் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை செய்ததில், மின் விசிறியில் தூக்கு போட்டு ஜோனாதன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஜோனாதன் கடைசியாக ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிட்ட பெண்ணிடம் விசாரித்ததில், ஜோனாதன் தன்னை ஒருதலையாக காதலித்ததாகவும், நேற்று வீடியோ கால் செய்த அவர், தன்னை காதலிக்கவில்லை என்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறியதாகவும் அந்த பெண் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.