புதையலை தேடி இரவு பகலாக யாருக்கும் தெரியாமல் குழி தோண்டிய 4 பேர்..!! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..

புதையலை தேடி இரவு பகலாக யாருக்கும் தெரியாமல் குழி தோண்டிய 4 பேர்..!! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..



2 member dead near Thoothukudi when try to found treasure

புதையலுக்கு ஆசைப்பட்டு பள்ளம் தோண்டியபோது கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள திருவள்ளூர் காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவரது வீட்டின் பின்புறத்தில் புதையல் இருப்பதாக இவருக்கு யாரோ கூற, அவரும் அதை நம்பி, அந்த புதையலை எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும் புதையல் இருப்பதாக சொல்லப்பட்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பலநாள் பூஜைகள் நடத்தி, அந்த புதையலை எடுக்க முயற்ச்சி செய்துள்ளனர்.

இந்த முயற்ச்சியில் முத்தையாவின் மகன்கள் சிவமாலை மற்றும் சிவவேலன் ஆகியோரும், அவர்களுக்கு உதவியாக ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ரகுபதி மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் கணபதி ஆகியோரும் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக இரவு பகலாக யாருக்கும் தெரியாமல் புதையல் இருக்கும் இடத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால், குழிக்குள் தண்ணீர் சேர்ந்துள்ளது. தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றிய பிறகு நான்கு பேரும் மீண்டும் குழிக்குள் இறங்கி பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் அவர்கள் குழி தோண்டியுள்ளனர். அப்போது, முத்தையாவின் உறவுக்கார பெண் ஒருவர் தண்ணீர் கொடுப்பதற்காக குழிக்குள் இறங்கியுள்ளார். குழிக்குள் இறங்கிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் , பள்ளம் தோண்டுவதற்க்காக குழிக்குள் இறங்கிய நான்கு பேரும் உள்ளே மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதனைக்கண்டு அலறியபடி மேல வந்த அவர், அங்கிருந்தவர்களிடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே இந்த தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து குழிக்குள் மயங்கிக்கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருந்துவமனை செல்லும் வழியிலேயே  ரகுபதியும், கல்லூரி மாணவரான நிர்மல் கணபதியும் பரிதாபமாக இறந்தனர். முத்தையாவின் மகன்களான சிவமாலை, சிவவேலன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து புதையல் எடுக்க பள்ளம் தொடங்கிய இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். புதையலுக்கு ஆசைப்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.