13 வயது சிறுமி வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம்.. தனியாக இருந்த சிறுமியை மிரட்டி நடந்த பயங்கரம்..!

13 வயது சிறுமி வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம்.. தனியாக இருந்த சிறுமியை மிரட்டி நடந்த பயங்கரம்..!



13 years old girl raped by her step father

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவியுடைய தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விமல் (வயது 35) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுமியின் தாய் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், அவர் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் இருக்கும் வளர்ப்பு தந்தை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். 

கோயம்புத்தூர் மாவட்டம்

இதனால் பதறிப்போன சிறுமி விஷயத்தை வெளியே கூறாததால், அதனை தனக்கு சாதகமாக்கி இருக்கிறார். பல சமயத்தில் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால், அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் குன்றிய மகளை தாய் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது மருத்துவர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர். 

மேலும், அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததும் அம்பலமானது. இதனையடுத்து, விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு தந்தையால் நடந்தது உறுதியாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் விமலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.