திருநீறு வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்; ஆன்மீக அன்பர்களே தெரிஞ்சிக்கோங்க.!



Thiruneeru aniyum murai Tamil 

 

நமது இறைவழிபாட்டில் முக்கியமானது திருநீறு. கோவிலுக்கு சென்றால் நெற்றியில் திலகமிட வழங்கப்படும் திருநீறு, சூர்யா கதிர்களின் சக்தி அலையை ஈர்த்து நெற்றியின் வழியே கடத்தும் தன்மை கொண்டது ஆகும். 

மருத்துவ குணம் கொண்ட திருநீறு நீரில் குழைத்து நெற்றியில் பூசப்படும் பட்சத்தில், கபாலத்தில் இருக்கும் நீர் வெளியேற்றப்பட்டு வியாதிகள் சரியாகும். 

திருநீறுக்கு சாரம், விபூதி, இரட்சை, பசுமம் என பல பெயர்களும் இருக்கின்றன. பசுவின் சாந்தை அக்னியில் இட்டு திருநீறு தயார் செய்யப்படுகிறது. அதுவே சுத்தமான திருநீறு ஆகும். 

மாறாக நாம் வணிக ரீதியாக பயன்படுத்தும் திருநீறு சுத்தமானது இல்லை. அவை மாற்று பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வாசனைக்காக நறுமண பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

Thiruneeru

திருநீறை நாம் பெறுகையில் கோவிலில் பிரசாதமாக வாங்கினால் வலது கையின் கீழே இடது கைகளை வைத்தவாறு வாங்க வேண்டும். அதனை திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தை உச்சரித்து திருநீறு வாங்கி, நெற்றியில் இடும்போது பஞ்சாட்சர மந்திரத்தை கூற வேண்டும். 

விபூதியினை வாங்கியதும் இடது கைகளில் கொட்டி பின் நெற்றியில் திலகமிட கூடாது. வலக்கையில் இருக்கும் விபூதியை அப்படியே திலகமிட வேண்டும். அல்லது தாளில் சேகரித்து பின் நெற்றியில் இடலாம். 

வயது குறைந்த நபர்களின் கைகளில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கலாம். நடந்தோ, படுதோ திருநீறு வைக்க கூடாது. வடக்கு / கிழக்கு திசையில் நின்று திருநீறு இடலாம். சிவனடியார் உட்பட சான்றோரிடம் இருந்து விபூதியை பெற அவர்களை வணங்கி பெறுதல் நலம்.