ஒட்டுமொத்த அணிக்கும் பயம் காட்டிய தோனி! உண்மையை ஒப்புக்கொண்ட விராட்கோலி!

ஒட்டுமொத்த அணிக்கும் பயம் காட்டிய தோனி! உண்மையை ஒப்புக்கொண்ட விராட்கோலி!


virat talk about yesterday match


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறு விறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த 39 வது போட்டியில் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது சென்னை அணிக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது. தல தோனியின் நிதானமான ஆட்டம் சென்னை அணியை வெற்றிக்கு அருகில் கொன்று சென்றது.

MS Dhoni

ஆட்டத்தின் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 சிக்ஸ், 1 பவுண்டரி மற்றும் 2 ரன்கள் என 5 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.
கடைசியில் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தை சாமர்த்தியமாக வீசிய உமேஷ் யாதவ் பந்தினை தோனியால் தொட முடியாமல், கீப்பரிடம் செல்வதற்குள் ஒரு ஓட்டம் எடுக்க முயற்சித்தபோது தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

MS Dhoni

சென்னை அணியில் கடைசி வரை களத்தில் இருந்த தோனி 48 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார். இந்நிலையில், தோனி கடைசி ஓவரில் தங்களுக்கு பயத்தை காட்டியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி தன்னால் எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு அடித்தார். எங்கள் ஒட்டும்மொத்த அணிக்கும் தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார்’ என விராட் கூறியுள்ளார்.