தன்னம்பிக்கை இழந்து விட்டாரா விராட் கோலி... முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சனம்.!
தன்னம்பிக்கை இழந்து விட்டாரா விராட் கோலி... முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சனம்.!
அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் அவுட்டானார்.
ஒடியல் ஸ்மித் பந்தை ஆட முயன்ற போது விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். மாடர்ன் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்றைய போட்டியில் கோலி சரியான நேரத்தில் தனது காலினை நகர்த்தாத காரணத்தால் அவுட்டாகி உள்ளார். கோலி அவுட் ஆனாதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் இந்த நேரத்தில் அவரது தன்னம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.