சீனியர் வீரர்கள் குறித்து உணர்ச்சி வசத்தில் மனம் திறந்த விராட்கோலி!!

சீனியர் வீரர்கள் குறித்து உணர்ச்சி வசத்தில் மனம் திறந்த விராட்கோலி!!



Virat kohli about 2011 world cup players

கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். மேலும் ஐபிஎல் ஆரம்பமானால் போதும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் சேர்ந்து விடும். 

போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் என்பதற்கு ஏற்ப ஹாட்டர்ஸ் எவ்வளவு பேர் இருந்தாலும், இவரை ஆதரிப்பதற்கு தனி கூட்டம் எப்பொழுதும் இருக்கும்.

தற்போது ஆசிய உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், இது குறித்து விராட் கோலி கூறுகையில் 2001 இல் உலகக் கோப்பை வெல்லும் போது எனக்கு 23 வயது தான்.

cricket

அந்த கோப்பையை வென்றது எவ்வளவு பெரிய விஷயம் என்று அப்பொழுது என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது எனக்கு 34 வயதாகிறது. பல உலக கோப்பைகளை விளையாடி விட்டேன்.

ஆனால் இதுவரை எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்பொழுது தான் 2001ல் சீனியர் வீரர்களிடமிருந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.