ஐய்யோ அவரா?? ப்ளே ஆஃப் நேரத்தில் திடீரென அணியில் இருந்து விலகிய சிஎஸ்கே வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ஐய்யோ அவரா?? ப்ளே ஆஃப் நேரத்தில் திடீரென அணியில் இருந்து விலகிய சிஎஸ்கே வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..



Sam curren left from IPL 2021

காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் இளம் வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை அணி இந்த ஐபில் சீசனில் சிறப்பாக விளையாடிவருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் அடுத்த சுற்று ஆட்டத்திற்கு சென்னை அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

ipl t20

இதனால் ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், சென்னை அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரண் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

ipl t20

காயம் தீவிரமாக இருப்பதால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இதனால் எஞ்சியுள்ள ஐபில் போட்டிகளில் இருந்து தான் விலகுவதாக சாம் கரண் அறிவித்துள்ளார். அதேபோல் இந்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் சாம் கரண் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கரண் சேர்க்கப்பட்டுள்ளார்.