அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
இதுவரை யாருமே செய்யாத சாதனையை செய்துள்ள ரோகித் சர்மா! என்ன சாதனை தெரியுமா?
இதுவரை யாருமே செய்யாத சாதனையை செய்துள்ள ரோகித் சர்மா! என்ன சாதனை தெரியுமா?
இந்திய அணியின் அதிரடி மற்றும் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் ரோகித் சர்மா. இவர் இந்திய அணியின் துணைக் கேப்டனும் ஆவார்.
சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடருக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 85 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 2326 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் இத்தனை நாட்களாக வெளிச்சத்திற்கு வராத இவரது மற்றொரு சாதனை தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை 11 நாடுகளில் சர்வதேச T20 போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 10 நாடுகளில் அரைசதம் அடித்துள்ளார். 10 நாடுகளில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
இவர் இதுவரை T20 போட்டி ஆடிய 11 நாடுகளில் ஜிம்பாப்வேயில் மட்டும் தான் அரைசதம் அடிக்கவில்லை. மேலும் பாகிஸ்தானில் இவர் T20 போட்டி ஆடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.