தனி ஆளாக போராடி அரைசதம் கடந்த ரோஹித்.! அசால்டாக முடித்த கெயில் - கே.எல்.ராகுல்.! சப்புன்னு முடிந்த ஆட்டம்.!

தனி ஆளாக போராடி அரைசதம் கடந்த ரோஹித்.! அசால்டாக முடித்த கெயில் - கே.எல்.ராகுல்.! சப்புன்னு முடிந்த ஆட்டம்.!



punjab-kings-won-by-9-wkts

ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது. நேற்றய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் துவக்க  வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் 17 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 27 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். 

துவக்க வீரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது மும்பை அணி. பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் ஹூடா மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பஞ்சாப் அணி 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய கெயில் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையடினார். 

பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தநிலையிலும், கெயில் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து விக்கெட் 9 வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.